search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா தொடர்"

    • உலகக் கோப்பை தொடர் முடிந்த உடன் ஆஸ்திரேலியாவுடன் டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
    • ஹர்திக் பாண்டயாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மாற்று கேப்டன் நியமிக்கப்பட இருக்கிறார்.

    இந்தியாவில் தற்போது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. வருகிற 19-ந்தேதியுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைகிறது. உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

    முதல் போட்டி வருகிற 22-ந்தேதி மொகாலியிலும், 2-வது போட்டி 24-ந்தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் 27-ந்தேதியும் நடக்கிறது.

    டி20 கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உலகக் கோப்பையில் விளையாடும்போது காயம் ஏற்பட்டது. இதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார். அவரது காயம் முழுமையாக குணமடையவும், தென்ஆப்பிரிக்கா தொடருக்கு தயாராகுவதற்காகவும் ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வு கொடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கே.எல். ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

    இதனால் யார் கேப்டனாக செயல்படுவார்? என்ற கேள்வி எழுந்தது. தற்போது சூர்யகுமார் யாதவ் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே, துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார். டி20, ஒருநாள் போட்டிக்கான அணியில் முன்னணி வீரராக செயல்பட்டு வருகிறார்.

    அதேவேளையில் ஆசிய கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டார். இவரும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என ஒரு கருத்து நிலவுகிறது. என்றபோதிலும், சூர்யகுமாருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பை அரையிறுதிக்குப் பிறகு கேப்டன் பெயர் அறிவிக்கப்பட இருக்கிறது.

    • சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்காக பராக் விளையாடினார்.
    • 10 போட்டிகளில் விளையாடிய அவர் 85.00 சராசரியில் 510 ரன்கள் எடுத்துள்ளார்.

    உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நவம்பர் 19-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக ரியான் பராக் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்திய அணியில் இடம் பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவர் சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்காக விளையாடினார். 10 போட்டிகளில் விளையாடிய அவர் 85.00 சராசரியில் 510 ரன்கள் எடுத்துள்ளார். முஷ்டாக் அலி டிராபியில் நம்பமுடியாத ஸ்ட்ரைக் ரேட்டில் (182.79) பராக் அதிக ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் இந்தியா வந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
    • நவம்பர் 23-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை இத்தொடர் நடைபெறுகிறது.

    சிட்னி:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும், ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    நவம்பர் 23-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை இத்தொடர் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் மேத்யூ வேட் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.

    மேத்யூ வேட் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா உள்ளிட்ட 15 பேர் கொண்ட பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    • முதலில் ஆடிய இந்திய அணி 399 ரன்களை குவித்தது.
    • சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி அதிரடியாக ஆடி 200 ரன்கள் சேர்த்தனர்.

    இந்தூர்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்போது ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் திணறினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஷ்ரேயஸ் அய்யர் 86 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட சதமடித்தார். அவர் 105 ரன்னில் அவுட்டானார். இது இவரது 3வது ஒருநாள் சதமாகும்.

    சுப்மன் கில் 92 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 200 ரன்கள் குவித்தனர். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார்.

    தொடர்ந்து ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடியில் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர். ராகுல் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    கேமரூன் கிரீன் வீசிய 43-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 4 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

    • சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது.
    • 2வது ஒருநாள் போட்டியில் இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இந்தூர்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்போது ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து இருவரும் அரை சதமடித்தனர்.

    சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் திணறினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    இந்நிலையில், சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஷ்ரேயஸ் அய்யர் 86 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட சதமடித்தார். அவர் 105 ரன்னில் அவுட்டானார். இது இவரது 3வது ஒருநாள் சதமாகும்.

    சுப்மன் கில் 92 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார்.

    2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 200 ரன்கள் குவித்தனர்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • இந்திய அணி 9.5 ஓவரில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது.

    இந்தூர்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்போது ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது.

    இந்தூர்:

    உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது. அதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

    முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணா களமிறங்குகிறார்.

    இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    • டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    மொகாலி:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டேவிட் வார்னர் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட் ஆனர். ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்னும், ஸ்மித் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்திய அணி 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    சுப்மன் கில் 74 ரன், ருதுராஜ் 71 ரன், சூர்யகுமார் யாதவ் 50 ரன் மற்றும் கே.எல்.ராகுல் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

    இந்நிலையில், வெற்றி குறித்து கேப்டன் கே.எல்.ராகுல் பேசியதாவது:

    நான் கேப்டனாக இருப்பது இது முதல் முறை கிடையாது. யாரேனும் இல்லை என்றால் இந்த பொறுப்பு என்னை தேடி வந்துவிடும். இதற்கு நான் பழகிக் கொண்டு விட்டேன். இந்த பொறுப்பும் எனக்கு பிடித்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் காட்டிய உத்வேகம் மிகவும் சிறப்பானது.

    எங்கள் அணியில் இன்று 5 பந்துவீச்சாளர்கள் தான் இருந்தார்கள். அதனால் அனைவருமே 10 ஓவர்கள் வீச வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது கில் மற்றும் ருதுராஜ் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். எனினும் கில் ஆட்டம் இழந்த பிறகு போட்டியில் நாங்கள் நெருக்கடியை சந்தித்தோம்.

    ஏனென்றால் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் ஆட்டம் இழந்தால் எப்போதுமே பின்னால் வருபவர்களுக்கு சிக்கல்தான். நானும் சூரியகுமாரும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்அமைத்தோம். ஒரு வீரராக இது போன்ற கடின சவால்களை சந்திக்க ஆசைப்படுகிறேன்.

    அதிரடியாக ஆடி விக்கெட்டுகளை இழக்க நாங்கள் விரும்பவில்லை. போட்டியை கடைசி வரை கொண்டு சென்று வெற்றி பெற வேண்டும் என நானும் சூரியகுமாரும் பேசி வைத்து விளையாடினோம் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 276 ரன்கள் சேர்த்தது.
    • தொடர்ந்து ஆடிய இந்தியா 281 ரன்கள் எடுத்து வென்றது.

    மொகாலி:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட் ஆனர். ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்னும், ஸ்மித் 41 ரன்னும், லபுசேன் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்திய அணி 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    சுப்மன் கில் 74 ரன், ருதுராஜ் 71 ரன், சூர்யகுமார் யாதவ் 50 ரன் மற்றும் கே எல் ராகுல் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

    ஆட்டநாயகன் விருது முகமது ஷமிக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா உடனான வெற்றிக்கு பிறகு வெளியான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

    இதன்மூலம் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
    • கிரீன் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன் படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஸ் களமிறங்கினர். மிட்செல் மார்ஸ் முதல் ஓவரிலேயே முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டேவிட் வார்னருடன் ஸ்டீவ் சுமித் ஜோடி சேர்ந்து ஆடினர்.

    சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் அடித்து அசத்தினார். இவர் 52 ரன்களில் அவுட் ஆனர். இந்த ஜோடி 2 விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தது. இவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே ஸ்மித் (41) ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த லெபுசென் 39 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார். 157 ரன்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இதனையடுத்து கிரீன் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். 35.4 ஓவரில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

    இதையடுத்து, மார்னஸ் லாபுஸ்சாக்னே 39 ரன்களும், கேமரூன் கிரீன் 31 ரன்களும், மார்ஸ் ஸ்டாயினிஸ் 29 ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில், 47.3 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் எடுத்திருந்தது.

    களத்தில் மாத்யூ ஷார்ட் மற்றும் பாட் கம்மின்ஸ் விளையாடினர். இதில், மாத்யூ ஷார்ட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, களமிறங்கிய சீயான் அபோட்டும் இரண்டு ரன்களில் அவுட்டானார்.

    சீயானின் விக்கெட்டை தொடர்ந்து களமிறங்கிய ஆடம் சம்பா 2 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். பாட் கம்மின்ஸ் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம், 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • இந்திய அணி தரப்பில் முகமது சமி 2, அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியின் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன் படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஸ் களமிறங்கினர். மிட்செல் மார்ஸ் முதல் ஓவரீலேயே முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டேவிட் வார்னருடன் ஸ்டீவ் சுமித் ஜோடி சேர்ந்து ஆடினர்.


    சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் அடித்து அசத்தினார். இவர் 52 ரன்களில் அவுட் ஆனர். இந்த ஜோடி 2 விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தது. இவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே ஸ்மித் (41) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லெபுசென் 39 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    157 ரன்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கிரீன் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். 35.4 ஓவரில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்திய அணி தரப்பில் முகமது சமி 2, அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

    • அஸ்வின் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்
    • ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு

    உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது. அதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியின் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணி விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. மிட்செல் மார்ஷ், 3. ஸ்மித், 4. மார்னஸ் லபுசேன், 5. கேமரூன் கிரீன், 6. ஜோஷ் இங்க்லிஸ் (விக்கெட் கீப்பர்), 7. மார்கஸ் ஸ்டோய்னிஸ், 8. மேத்யூ ஷார்ட், 9. பாட் கம்மின்ஸ் (கேப்டன்), 10. சீன் அப்போட், 11. ஆடம் ஜம்பா

    இந்திய அணி விவரம்:-

    1. சுப்மான் கில், 2. ருதுராஜ் கெய்க்வாட், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. கே.எல். ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 5. இஷான் கிஷன், 6. சூர்யகுமார் யாதவ், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. ஷர்துல் தாக்குர், 10. பும்ரா, 11. முகமது ஷமி

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் நட்சத்திர ஜோடியாக அஸ்வின்- ஜடேஜா ஜோடி திகழ்கிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் இருவரும் இணைந்து விளையாடியது கிடையாது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆறு வருடத்திற்கு முன் இருவரும் இணைந்து விளையாடினர். அதன்பின் தற்போது சேர்ந்து விளையாடுகிறார்கள்.

    ×